இசையால் வசமான 'ஆஸ்கார்'

எத்தனைத் திரையுலக நட்சத்திரங்களின் கனவு….ஆஸ்காரிற்கான கதவினை 'கமல் திறந்து வைப்பாரா..அமீர்கான் திறந்து வைப்பாரா..என்று ஏக்கப்பட்டு, 'ஆஸ்கார்' ! பரிந்துரை செய்யப்பட்டாலேயே கொண்டாடிய காலங்கள் நினைவிலேயே இருக்கின்ற பொழுதினிலேயே....இன்று நனவாய்…! Great AR Rahman!!!
பதட்டமாய் இருந்தது பரிசுபெற்ற படைப்பாளி மட்டுமல்ல.. இந்தியத் திரையுலகின் அபிமானிகளும்தான்..
உழைப்பிற்கும், தொழிலின் நேசிப்பிற்கும், திறமைக்கும் கிடைக்க வேண்டிய பரிசு… சரியான தருணத்தில் கிடைப்பதற்கும் கடவுளின் ஆசி வேண்டும். ரஹ்மானுக்கு அது எட்டியிருக்கின்றது!
மெல்லிசையால் தமிழனைத் தன்பால் ஈர்த்தவர் எம்எஸ்வி
இன்னிசையால் இந்தியனையும் தன்பால் ஈர்த்தவர் இளையராஜா
தன்னிசையால் அகில உலகினையும் இந்தியத்தமிழன்பால் ஈர்த்தவர் ரஹ்மான்!
இதில் இவருக்கில்லாமல் அவருக்கா..அவருக்கில்லாமல் இவருக்கா என்று மாற்றாந்தாய் மனப்பான்மையோடு வேறுபடுத்திப் பார்க்கமல், எல்லோரும் ஒரே தமிழ்க்குடும்பம்தான் என்ற நோக்கில் ஒன்றுபட்டு ரஹ்மானைப் பாராட்டுவோம்…!
இசைப்புயலே..இந்தக் கிரீடம் முள்கிரிடமாய் மேலும் பல பொறுப்பினைக் கொடுத்து முடக்கிவிடாமல், மலர்க்கீரீடமாய் மேலும் பல மெல்லிசை பரப்ப வாழ்த்துக்கள்!
